Sunday, March 14, 2010

வாக்களியுங்கள்

அது நடந்து ஏறத்தாழ பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும் , ஆம் நாங்கள் தோழமையோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. அரசியல்வாதிகளின் கொடுமைகளை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்களால் முடிந்தவரை கூட்டங்கள் நடத்தினோம். விவாதங்கள் நடத்தினோம். போதுமானதாகத் தெரியவில்லை. நண்பர்கள் கூடினோம். துண்டு துண்டாக காகிதத்தை வெட்டினோம். ஒரு சிறு கவிதை,அதுவும் வேட்பாளரே பேசுவது போல, ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து எழுதத்துவங்கினோம். ஆயிரக்கணக்கில் தயார் பண்ணிவிட்டோம். எங்கள் பகுதியில் தெருமுனையில் நின்று போவோர் வருவோர்கெல்லாம் விநியோகம் செய்தோம். உண்மையிலேயே அது அப்போது நடந்த தேர்தலில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தக் கவிதை இதோ...

எனக்கு வாக்களித்து
நான்...
கொள்ளையடிப்பதற்கும் ..
கொலை செய்வதற்கும் ..
சாதி , மத ,பேதங்களைத் தூண்டி
தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் திளைத்து -
உங்களை ஓட்டாண்டியாக்க
எனக்கு அங்கீகாரம் அளியுங்கள்.

--உங்கள் தொகுதி வேட்பாளர்.

உங்கள் சின்னம். திருவோடு.

அறிவுச் சுடர் நடுவம்,
மதுரை.

No comments:

Post a Comment