Friday, March 12, 2010

திரளுவோம் ...

திண்ணியத்தில் மலம்தின்னவைக்கிறான் ...
திருச்சியில் மாநாடு !

ஊஞ்சனையில் வன்சாதிக்கொடுமைகள் ...
மதுரையில் ஊர்வலம் !

முதல் தெருவில் துரத்தும் நாய்க்கு ...
மூன்றாம் தெருவில் கல்லெறியா?


ஒரு நாளும்
ஒரு நாயும்
அடிபடாது !

மலம் ஊட்டியவன் வலம் வருகிறான் - வெ(ற்)றியுடன்!
பலியானவன் கைதாகிறான் !
தேசத் துரோகியாய் .....
தீவிரவாதியாய் ....!

பகுத்தறிவைக் கேவலமாக்கும் இந்தப்
பட்டறிவு போதும் இனிநமக்கு ..!


வழிமுறையைத் திருத்துவோம் ...
நடைமுறையால் மிரட்டுவோம் ...
சாதித்திமிரை ஒடுக்குவோம்.

ஆம்.

முதற்கட்ட முயற்சியாய்.........

தின்னவைத்த அதே மலத்தை
தொட்டி தொட்டியாய் இழுத்துவந்து
ஆதிக்க சாதியின் அத்துனை தெருக்களிலும்
சிதறிஎறிவோம் ..!

அதன்பிறகும் அதுபோல
எங்கேனும் நடந்தால் .....

தின்ன வைத்தவனைத்
தின்ன வைப்போம் ..
ஆயிரம்பேராய்த் திரண்டுபோய் .


அப்போது கைதானால் பெருமைகொள்வோம்.


நாம்..

பகுத்தறிவுவாதிகளென்றும் .
வீரம் செரிந்தவரென்றும்...

No comments:

Post a Comment